ADDED : ஜூன் 20, 2025 08:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே தாணிப்பூண்டி கிராமத்தில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திராவில் இருந்து மணல் கடத்தி வந்த லாரி ஒன்றை பறிமுதல் செய்தனர்.
அதன் ஓட்டுனரான பாதிரிவேடு பகுதியைச் சேர்ந்த சின்னராசு, 33, என்பவரை கைது செய்தனர். பாதிரிவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.