sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

அழிவின் விளிம்பில் தாமரை ஏரி நீர்வள துறை அதிகாரிகள் மவுனம்

/

அழிவின் விளிம்பில் தாமரை ஏரி நீர்வள துறை அதிகாரிகள் மவுனம்

அழிவின் விளிம்பில் தாமரை ஏரி நீர்வள துறை அதிகாரிகள் மவுனம்

அழிவின் விளிம்பில் தாமரை ஏரி நீர்வள துறை அதிகாரிகள் மவுனம்


ADDED : ஏப் 06, 2025 11:11 PM

Google News

ADDED : ஏப் 06, 2025 11:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி நகரில், 48 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் தாமரை ஏரி, பொதுப்பணித் துறையின் நீர்வளத் துறையினர் பராமரிப்பில் உள்ளது. நகரின் ஒரே நீராதாரம், தற்போது குப்பை மற்றும் கழிவுநீரின் குட்டையாக மாறி வருகிறது.

ஒருபுறம், டேங்கர் லாரி கழிவுநீர் மற்றும் தொழிற்சாலை கழிவுநீர் கலப்பதால், ஏரி நீர் மாசடைந்து ஆகாய தாமரை படர்ந்துள்ளது.

மறுபுறம், ஏரியை சுற்றி கும்மிடிப்பூண்டி பேரூராட்சி மற்றும் பெத்திக்குப்பம் ஊராட்சியின் குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. அங்கிருந்து வெளியேறும் கழிவுகள் ஏரியை சுற்றி குவிப்பதும், கழிவுநீரை நேரடியாக ஏரியில் திறந்து விடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இதனால், தாமரை ஏரியின் உட்புறமும், வெளிபுறமும் முற்றிலும் மாசடைந்து அழிவின் விளிம்பில் உள்ளது. தாமரை ஏரியை மீட்டெடுக்க வேண்டும். அதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியமும், நீர்வளத் துறையினரும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகங்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, கும்மிடிப்பூண்டி தாமரை ஏரியை பாதுகாக்க வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us