sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

குறைந்தழுத்த மின் வினியோகம் அகூர் கிராமவாசிகள் கடும் அவதி

/

குறைந்தழுத்த மின் வினியோகம் அகூர் கிராமவாசிகள் கடும் அவதி

குறைந்தழுத்த மின் வினியோகம் அகூர் கிராமவாசிகள் கடும் அவதி

குறைந்தழுத்த மின் வினியோகம் அகூர் கிராமவாசிகள் கடும் அவதி


ADDED : ஏப் 23, 2025 02:17 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி, திருத்தணி ஒன்றியம் அகூர் கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு, விவசாயமே பிரதான தொழில். இந்நிலையில், திருத்தணி மின்வாரிய அதிகாரிகள் அகூர் கிராமத்தில், 100 கே.வி., மின்மாற்றி அமைத்து, மின்வினியோகம் செய்து வருகின்றனர்.

அதேபோல், அகூர் விவசாயிகளின் மின்மோட்டார் இணைப்புக்கு, 100 கே.வி., மின்மாற்றி அமைத்து மின்வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மின் பயன்பாடு அதிகரித்து உள்ளதால், வீடுகள் மற்றும் விவசாய மின் மோட்டார்களுக்கு குறைந்தழுத்த மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.

இதனால், கிராமத்தில் மின்விளக்கு சரியாக விளக்குகள் ஒளிர்வதில்லை. மேலும், குடிநீர் தொட்டிகளுக்கு மின் மோட்டார் வாயிலாக குடிநீர் ஏற்ற முடியவில்லை. அதேபோல், விவசாய மின் மோட்டார்களும் இயக்க முடியாததால் விவசாயிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, மாவட்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து, அகூர் கிராமத்தில் கூடுதல் மின்மாற்றி அமைத்து, சீராக மின்வினியோகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் மற்றும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us