sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணியில் 18 அரசு பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் 'விறுவிறு'

/

திருத்தணியில் 18 அரசு பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் 'விறுவிறு'

திருத்தணியில் 18 அரசு பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் 'விறுவிறு'

திருத்தணியில் 18 அரசு பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் 'விறுவிறு'


ADDED : ஜன 12, 2025 02:42 AM

Google News

ADDED : ஜன 12, 2025 02:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி,திருத்தணி வருவாய் கோட்டத்தில், 35 அரசு உயர்நிலைப் பள்ளி, 22 அரசு மேல்நிலைப் பள்ளி என, மொத்தம், 57 பள்ளிகள் இயங்கி வருகின்றன.

இதில், பெரும்பாலான பள்ளிகளில் போதிய அடிப்படை வசதிகள் மற்றும் பழுது பார்க்கும் பணிகள் அதிகளவில் இருந்தன.

இதையடுத்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பரிந்துரையின்படி, முதற்கட்டமாக, 18 அரசு பள்ளிகள் பராமரிப்பு மற்றும் போதிய வசதிகள் ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம், 1.29 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.

தற்போது, பள்ளிகளில் பராமரிப்பு மற்றும் மாணவர்களுக்கு அடிப்படை வசதி பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன.

இது குறித்து திருத்தணி பொதுப்பணித் துறைகட்டடம் மற்றும்பராமரிப்பு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வருவாய் கோட்டத்தில், திருத்தணி, முருக்கம்பட்டு, அருங்குளம், நெமிலி, அமிர்தாபுரம் உட்பட மொத்தம், 18 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், நுாலகம், ஆய்வகம், வகுப்பறைகள், தரைத்தளம், கழிப்பறை, கதவு, ஜன்னல் மற்றும் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்தல் மற்றும் வண்ணம் தீட்டுதல் போன்ற பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

இப்பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன. வரும், பிப்ரவரி மாதத்திற்குள், 18 பள்ளிகளிலும் பராமரிப்பு, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி, மாணவர்கள் பயன்பாட்டிற்கு விடப்படும்.

இவ்வாறு அவர்கூறினார்.






      Dinamalar
      Follow us