/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரயில் நிலையத்தில் ஆண் சடலம் மீட்பு
/
ரயில் நிலையத்தில் ஆண் சடலம் மீட்பு
ADDED : ஜூலை 10, 2025 09:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:மணவூர் ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.
திருவள்ளூர் அடுத்து அமைந்துள்ளது மணவூர் ரயில் நிலையம். இங்கு முதலாவது நடைமேடை அருகே 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இதைக் கண்ட பயணியர் திருவள்ளூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சடலத்தை மீட்ட ரயில்வே போலீசார் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, இறந்த நபர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என, விசாரிக்கின்றனர்.

