ADDED : ஏப் 08, 2025 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செவ்வாப்பேட்டை,செவ்வாப்பேட்டை அடுத்த தொழுவூர் பகுதியில் உள்ள ஏரியில் ஆண் சடலம் கிடப்பதாக, நேற்று முன்தினம் இரவு தொழுவூர் வி.ஏ.ஓ.,வுக்கு தகவல் கிடைத்தது.
இதுகுறித்து வி.ஏ.ஓ., கல்யாணசுந்தரி அளித்த புகாரின்படி வழக்கு பதிந்த செவ்வாப்பேட்டை போலீசார், சடலத்தை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.