sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கல்குவாரி குட்டையில் ஆண் சடலம் மீட்பு

/

கல்குவாரி குட்டையில் ஆண் சடலம் மீட்பு

கல்குவாரி குட்டையில் ஆண் சடலம் மீட்பு

கல்குவாரி குட்டையில் ஆண் சடலம் மீட்பு


ADDED : ஏப் 18, 2025 02:34 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 02:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி நகராட்சி, சுப்பிரமணியபுரம் ரயில்வே குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் சுதாகர், 42. இவர், திருமண மண்டபங்களுக்கு அலங்காரம் மற்றும் பூ கட்டும் தொழில் செய்து வந்தார். இவருக்கு கவுதமி,36 என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இரு நாட்களுக்கு முன்பு, சுதாகர் தனது மகளை பள்ளியில் விடுவதற்காக, இரு சக்கர வாகனத்தில் சென்றார். அதன் பின், நேற்று முன்தினம் வரை வீட்டிற்கு சுதாகர் திரும்பி வரவில்லை.இதையடுத்து, கவுதமி மற்றும் அவரது உறவினர்கள் பல இடங்களில் சுதாகரை தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், பெரியார் நகர் கல்குவாரியில் ஆண் சடலம் மிதந்து வந்ததை, நேற்று காலை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து, திருத்தணி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து திருத்தணி இன்ஸ்பெக்டர் மதியரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கல்குவாரியில் மிதந்த ஆண் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.

இறந்தவர் சுப்பிரமணியபுரம் சேர்ந்த சுதாகர் என தெரிய வந்தது. மேலும் கல்குவாரி குட்டையின் அருகே, சுதாகரின் இரு சக்கர வாகனம் இருந்ததையும் போலீசார் கண்டறிந்தனர்.

கல்குவாரி குட்டையில் சுதாகர் மது போதையில் குளிக்கும்போது தண்ணீரில் மூழ்கி இறந்தாரா அல்லது முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் அடித்து கொலை செய்து, குட்டையில் வீசிவிட்டு சென்றார்களா என, பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சுதாகருக்கு நீச்சல் தெரியும்; அவனின் மொபைல் போன் காணவில்லை என்பதும் பொலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.






      Dinamalar
      Follow us