/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது
/
பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது
ADDED : ஜன 08, 2025 07:59 PM
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அடுத்த, பாலவாக்கம் காலனியைச் சேர்ந்தவர் பூங்கொடி, 54. கடந்த, 7ம் தேதி இவர், சென்னங்காரணி கிராமத்தில், மகள் வீட்டிற்கு சென்றார். இரவு 8:00 மணிக்கு, பூங்கொடி மறைவான இடத்திற்கு இயற்கை உபாதை கழிக்க சென்றார்.
அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் பலாத்காரம் செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்ற பொதுமக்கள், ரத்த காயத்துடன் இருந்த பூங்கொடியை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது தொடர்பாக ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்த நிலையில், பெண்ணை பலாத்காரம் செய்தது, அதே ஊரைச் சேர்ந்த ராஜா, 24, என தெரியவந்தது. அவரை ஊத்துக்கோட்டை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

