ADDED : ஜூலை 07, 2025 11:15 PM
அ நிறம் | அளவு
ஆவடி, ஆவடி அடுத்த பொத்துார், உப்பரப்பளையம் பகுதியில் விநாயகர் கோவில் அமைந்துள்ளது.
இதன் நிர்வாகி பாலாஜி, 45, நேற்று காலை கோவிலை திறந்த போது, கோவில் உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்து 1,000 ரூபாய் காணிக்கை பணம் திருடப்பட்டு இருந்தது.
இது குறித்து விசாரித்த அவடி டேங்க் பேக்டரி போலீசார், திருட்டில் ஈடுபட்ட திருமுல்லைவாயில், ஆரிக்கம்பேடைச் சேர்ந்த பிரகாஷ், 35, என்பவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.
