sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ரூ.78.63 லட்சம் 'சல்பர் பவுடர்' வாங்கி ஏமாற்றியவர் சிக்கினார்

/

ரூ.78.63 லட்சம் 'சல்பர் பவுடர்' வாங்கி ஏமாற்றியவர் சிக்கினார்

ரூ.78.63 லட்சம் 'சல்பர் பவுடர்' வாங்கி ஏமாற்றியவர் சிக்கினார்

ரூ.78.63 லட்சம் 'சல்பர் பவுடர்' வாங்கி ஏமாற்றியவர் சிக்கினார்


ADDED : ஜன 27, 2025 02:28 AM

Google News

ADDED : ஜன 27, 2025 02:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி:அம்பத்துார் தொழிற்பேட்டையில், 'தி ஸ்டாண்டர்டு கெமிக்கல்ஸ்' என்ற பெயரில், 'சல்பர்' ரசாயன பவுடர் உற்பத்தி செய்யும் நிறுவனம் செயல்படுகிறது.

சல்பர் பவுடர் என்பது கந்தகத்தின் துாள் வடிவம். மஞ்சள் நிறத்தில் இருக்கும் இது பூஞ்சைக் கொல்லியாகவும், பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுகிறது. நாட்டில் உள்ள பிரபல நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு 'சல்பர்' பவுடர் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடந்த 2022ம் ஆண்டு, ராஜஸ்தான் மாநிலத்தில், ஈஸ்வர் ராம் என்பவர் நடத்தி வரும் 'ஜஸ்நத்ஜி டிரேடர்ஸ்' என்ற நிறுவனத்துடன் வர்த்தக தொடர்பு ஏற்பட்டது. துவக்கத்தில் வாங்கிய ரசாயன பவுடருக்கு, முறையாக பணம் செலுத்தி உள்ளார்.

ஆனால், கடந்த 2022 டிசம்பர் முதல் பிப்ரவரி 2023 வரை, 78.63 லட்சம் ரூபாய் மதிப்பிலான 103 டன் 'சல்பர்' பவுடர் வாங்கி கொண்டு, பணத்தை தராமல் ஏமாற்றியுள்ளனர். இது குறித்து, நிறுவன மேலாளர் நாராயணன் என்பவர், கடந்த ஆக., 19ம் தேதி, ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் ரேகா தலைமையில், தனிப்படை போலீசார் விசாரித்தனர். இதில், அந்த நிறுவனம் போலி ஜி.எஸ்.டி., எண் மற்றும் 'ஆதார் கார்டு' தயாரித்து, 'சல்பர்' பவுடர் வாங்கி சென்றது தெரிய வந்தது.

தொடர் விசாரணையில், ஏமாற்றியது ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஈஸ்வர் ராம், 38, என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்து அழைத்து வந்த போலீசார், நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us