/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மரத்தில் இருந்து விழுந்தவர் பலி
/
மரத்தில் இருந்து விழுந்தவர் பலி
ADDED : நவ 11, 2025 10:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி: ஆரணி அடுத்த மங்கலம் கிராமத்தில் வசித்தவர் அரசு, 55. இரு தினங்களுக்கு முன் கவரைப்பேட்டை அடுத்த புதுவாயல் பகுதியில், தென்னை மரம் ஏறும்போது தவறி விழுந்து, தலையில் பலத்த காயமடைந்தார்.
ஆபத்தான நிலையில், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். வழக்கு பதிந்த கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

