sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணி கோவிலில் மரத்தேர் வீதியுலா

/

திருத்தணி கோவிலில் மரத்தேர் வீதியுலா

திருத்தணி கோவிலில் மரத்தேர் வீதியுலா

திருத்தணி கோவிலில் மரத்தேர் வீதியுலா


ADDED : பிப் 22, 2024 11:07 PM

Google News

ADDED : பிப் 22, 2024 11:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி,

திருத்தணி முருகன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா கடந்த மாதம், 14ம் தேதி விநாயகர் வீதியுலாவுடன் 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

மலைக்கோவில் தேர்வீதியில் உற்சவர் முருகர் வள்ளி, தெய்வானையுடன், தினமும் ஒவ்வொரு வாகனத்தில் காலை, இரவு ஆகிய இரு வேளைகளில் திருவீதியுலா வந்து அருள்பாலித்தார்.

நேற்று முன்தினம் இரவு உற்சவர் முருகர் மரத்தேரில் எழுந்தருளி, தேர்வீதியில் ஒருமுறை வலம் வந்து அருள்பாலித்தார்.

இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்தனர். சில பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி தேர் மீது தானிய வகைகளை வீசி வழிபட்டனர். நேற்று இரவு உற்சவர் முருகன் குதிரை வாகனத்தில் உலா வந்தார். நாளை தீர்த்தவாரி மற்றும் கொடி இறக்கத்துடன் மாசி மாத பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.

ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் மோகனன், உஷாரவி, சுரேஷ்பாபு மற்றும் நாகன் ஆகியோர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us