ADDED : அக் 29, 2025 10:07 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், வரும் 3ம் தேதி நெடுந்துார ஓட்ட போட்டி நடைபெற உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு, வரும் 3ம் தேதி காலை 6:00 மணிக்கு, ஆண் - பெண் இருபாலருக்கும், தனித்தனியாக மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது.
இதில், 17 - 25 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கு, 8 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ., 25 வயதிற்கு மேற்பட்ட ஆண் - 10 கி.மீ., பெண் - 5 கி.மீ., ஓட்ட போட்டி நடைபெறும். முதல் மூன்று இடத்தை பெறும் வீரர் - வீராங்கனையருக்கு முறையே, 5,000, 3,000, 2,000 ரூபாய் வழங்கப்படும்.
இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர், வரும் 2ம் தேதிக்குள், மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு நேரில் வந்து பதிவு செய்ய வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, மாவட்ட தடகள பயிற்றுநர் லாவண்யா - 80729 08634 என்ற மொபைல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

