ADDED : பிப் 15, 2024 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆரணி:ஆரணி அடுத்த போந்தவாக்கம் அருகே மாதவர்மேடு கிராமத்தில் வசித்தவர் கிருஷ்ணன், 43. அதே கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன், 60. இருவரும் கொத்தனார் வேலை பார்த்து வந்தனர்.
கடந்த 9ம் தேதி, வேலைக்காக இருவரும் ஆரணியில் இருந்து புதுவாயல் நோக்கி 'டி.வி.எஸ்., - எக்ஸ்.எல்.,' இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, ஆரணி பெட்ரோல் பங்க் அருகே எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியது. இதில், படுகாயம் அடைந்த கிருஷ்ணன், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். ஆரணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

