/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சமுதாய கூடத்திற்கு அமைச்சர் அடிக்கல்
/
சமுதாய கூடத்திற்கு அமைச்சர் அடிக்கல்
ADDED : ஜூன் 03, 2025 07:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்செட்டி முதல் நிலை ஊராட்சியில், 50 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட உள்ள சமுதாய கூடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் தலைமையில் நடந்த விழாவில், பொன்னேரி சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., துரைசந்திரசேகர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர், அடிக்கல் நாட்டினார்.