sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஆம்புலன்ஸ் மீது அரசு பஸ் மோதல் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்

/

ஆம்புலன்ஸ் மீது அரசு பஸ் மோதல் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்

ஆம்புலன்ஸ் மீது அரசு பஸ் மோதல் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்

ஆம்புலன்ஸ் மீது அரசு பஸ் மோதல் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்


ADDED : செப் 22, 2024 12:35 AM

Google News

ADDED : செப் 22, 2024 12:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்: ஒரகடம் அடுத்த, பண்ருட்டில் இருந்து, நேற்று காலை, 'டாடா மேஜிக்' வாகனத்தில் இருவர், ஒரகடம் சென்றனர்.

வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், பண்ருட்டி பி.எஸ்.பி., தனியார் மருத்துமனை அருகே வந்த போது, பின்னால் வேகமாக வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து, டாடா மேஜிக் வாகனத்தின் பின்புறம் மோதியது.

இதில், டாடா மேஜிக் வாகனத்தில் பயணித்த, பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த ஆனந்தன், 55 , மற்றும் அவரது மனைவி ராதா, 50, ஆகியோருக்கு, தலையில் லேசான காயம் ஏற்பட்டது.

அங்கிருந்தோர் உடனே, '108' அவசரகால ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவத்தனர். இதையடுத்து, அங்கு வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில், காயமடைந்த இருவரையும் ஏற்றினர்.

அப்போது, வேலுாரில் இருந்து தாம்பரம் நோக்கிச் சென்ற அரசு பேருந்து, சாலையோரம் நின்று இருந்த ஆம்புலன்ஸ் மீது உரசி, கட்டுப்பாட்டை இழந்து மீடியனில் மோதியது.

இதில், பேருந்தில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி லேசான காயம் அடைந்தனர். தகவலின்படி, அங்கு வந்த ஒரகடம் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு, மற்றொரு ஆம்புலன்ஸ் வாயிலாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்ளை மீட்க வந்த ஆம்புலன்ஸ் மீது, அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதால், வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில் போக்குவரத்து நெரிசல் எற்பட்டது. விபத்து குறித்து வாகன ஓட்டுனர்களிடம் ஒரகடம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us