/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையை நோக்கி ஆக்கிரமிக்கும் மரக்கிளையால் வாகன ஓட்டிகள் அச்சம்
/
சாலையை நோக்கி ஆக்கிரமிக்கும் மரக்கிளையால் வாகன ஓட்டிகள் அச்சம்
சாலையை நோக்கி ஆக்கிரமிக்கும் மரக்கிளையால் வாகன ஓட்டிகள் அச்சம்
சாலையை நோக்கி ஆக்கிரமிக்கும் மரக்கிளையால் வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : நவ 19, 2024 06:42 AM

கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி அருகே கண்ணம்பாக்கம் கிராமத்தில் இருந்து கொண்டமாநல்லுார், ஏடூர் வழியாக கும்புளி வரையிலான சாலை உள்ளது. இச்சாலையை மாநில நெடுஞ்சாலை துறையினர் பராமரித்து வருகின்றனர்.
நெடுஞ்சாலை துறையின் பிற மாவட்ட சாலைகளின் கீழுள்ள இச்சாலையை, மாநில நெடுஞ்சாலை துறையினர் முறையாக பராமரிப்பது கிடையாது என, கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.
கொண்டமாநல்லுார் கிராம எல்லையில், சாலையின் இருபுறமும் காப்பு காடுகள் உள்ளன. இந்த காடுகளின் எல்லையில் படர்ந்துள்ள மூங்கில் புதர்கள், சாலையின் பெரும் பகுதியை மறைத்துள்ளன.
இதன் காரணமாக, எதிரெதிரே வாகனங்கள் கடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இரவு நேரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளை, மூங்கில் புதர்கள் பதம் பார்ப்பதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே, வாகன ஓட்டிகளின் சிரமத்தை தவிர்க்க, உடனடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இடையூறாக உள்ள சாலையோர புதர்களை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.