/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பல்லாங்குழியாக மாறிய சாலை தடுமாறும் வாகன ஓட்டிகள்
/
பல்லாங்குழியாக மாறிய சாலை தடுமாறும் வாகன ஓட்டிகள்
ADDED : நவ 22, 2024 01:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:சென்னை -- பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையில் தினமும் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நெடுஞ்சாலையின் இருபுறமும் இணைப்பு சாலை உள்ளது. தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் இளைப்பாறுவதற்கு இணைப்பு சாலையை பயன்படுத்தி வருகின்றன.
இணைப்பு சாலை சில இடங்களில் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறி பல்லாங்குழிகளாக மாறி உள்ளது. இதனால் வாகன ஒட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேசிய நெடுஞ்சாலை இணைப்பு சாலை பகுதியில் ஆய்வு செய்து சீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.