/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தடுப்பின்றி சுண்ணாம்புகுளம் சிறுபாலம் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
/
தடுப்பின்றி சுண்ணாம்புகுளம் சிறுபாலம் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
தடுப்பின்றி சுண்ணாம்புகுளம் சிறுபாலம் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
தடுப்பின்றி சுண்ணாம்புகுளம் சிறுபாலம் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : பிப் 02, 2025 12:30 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூர் ரயில்வே மேம்பாலம் வழியாக சுண்ணாம்புகுளம் கிராமம் வரை செல்லும் சாலை, மாநில நெடுஞ்சாலை துறையினர் பராமரிப்பில் உள்ளது. அந்த சாலையில், முல்லைவாயல்மேடு கிராம எல்லையில், ஓட்டேரி என்ற பெயரில் பரந்து விரிந்து காணப்படும் நீர்வளத் துறை ஏரி அமைந்துள்ளது.
மேற்கண்ட சாலையின் குறுக்கே உபரி நீர் கால்வாய் செல்லும் இடத்தில் சிறு பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த பாலத்தின் ஓரம், தடுப்புகள் இன்றி இருப்பதால், அவ்வழியாக கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, இரவு நேரத்தில் சற்று கவனம் தவறினாலும், ஏரிக்குள் வாகனத்துடன் கவிழும் அபாயம் உள்ளது. மாநில நெடுஞ்சாலை துறையினர், அந்த பாலத்தில் தடுப்பு ஏற்படுத்த வேண்டும். அதுவரை வாகன ஓட்டிகளை எச்சரிக்கும், ஒளிரும் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.