sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சானுார் மல்லாவரம் ஓடை பாலத்தை ஆபத்தை உணராமல் கடக்கும் வாகன ஓட்டிகள்

/

சானுார் மல்லாவரம் ஓடை பாலத்தை ஆபத்தை உணராமல் கடக்கும் வாகன ஓட்டிகள்

சானுார் மல்லாவரம் ஓடை பாலத்தை ஆபத்தை உணராமல் கடக்கும் வாகன ஓட்டிகள்

சானுார் மல்லாவரம் ஓடை பாலத்தை ஆபத்தை உணராமல் கடக்கும் வாகன ஓட்டிகள்


ADDED : ஜன 05, 2025 10:51 PM

Google News

ADDED : ஜன 05, 2025 10:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், சகஸ்ரபத்மாபுரம் கிராமத்தில் இருந்து, சானுார் மல்லாரத்திற்கு, 2014ல் தார் சாலை போடப்பட்டது. இந்த மார்க்கத்தில் பாயும் ஓடைக்கு குறுக்கே, பாலம் கட்டப்பட்டது.

கடந்த 2020ல் பெய்த கனமழையின் போது இந்த பாலம் சேதம் அடைந்தது. அதை தொடர்ந்து ஓடையில் இறங்கி பகுதிவாசிகள் பயணித்து வந்தனர்.

சமீபத்தில் பெய்த புயல் மழையின் போது வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்த நிலையில், ஓடையின் குறுக்கே, தற்காலிகமாக கற்களை கொட்டி கரடு முரடான பாதைய ஏற்படுத்தினர்.

தற்போது, அந்த வழியில் ஆபத்தான முறையில் பயணித்து வருகின்றனர். சானுார் மல்லாவரத்தில் இருந்து, சித்துார் மாநில நெடுஞ்சாலைக்கு பயணிக்க இதுவே விரைவு சாலையாக அமைந்துள்ளதால், ஆபத்தை பொருட்படுத்தாமல் பயணித்து வருகின்றனர்.

இந்த சாலையை தவிர்த்தால், சானுார் மல்லாவரத்தில் இருந்து 10 கி.மீ., துாரம் கூடுதலாக பயணித்து, சோளிங்கர் வழியாக பயணிக்க வேண்டிய நிலை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பாலத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us