sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

நெடுஞ்சாலையில் மாடுகள் தஞ்சம் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்

/

நெடுஞ்சாலையில் மாடுகள் தஞ்சம் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்

நெடுஞ்சாலையில் மாடுகள் தஞ்சம் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்

நெடுஞ்சாலையில் மாடுகள் தஞ்சம் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்


ADDED : நவ 18, 2024 04:07 AM

Google News

ADDED : நவ 18, 2024 04:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை -- சத்தியவேடு சாலை நெடுஞ்சாலையின் பராமரிப்பில் உள்ள சாலையாகும். அந்த சாலை வழியாக தேர்வாய் கண்டிகை சிப்காட், மாதர்பாக்கம், ஆந்திர மாநிலம் சத்தியவேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

அந்த சாலையில், பல இடங்களில் மாடுகள் சுற்றி திரிவதையும், சாலையின் நடுவே இளைப்பாறுவதையும் காண முடிகிறது. நெடுஞ்சாலையில் தஞ்சம் அடையும் மாடுகளால் வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக குருத்தானமேடு முதல் பூவலம்பேடு வரையிலான சாலையில் அதிக அளவில் மாடுகள் சுற்றி திரிகின்றன. மீடியனில் உள்ள புற்களை மேய்வதற்காக வரும் மாடுகள், திடீரென சாலையின் குறுக்கே வரும் போது, வாகன ஓட்டிகள் திக்கு முக்காடி போகின்றனர்.

மாட்டின் உரிமையாளர்களை எச்சரித்து, மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் விதமாக, மாநில நெடுஞ்சாலை துறையினர், துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us