/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மணவூர் சாலையில் பள்ளம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
/
மணவூர் சாலையில் பள்ளம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : நவ 24, 2024 03:01 AM

திருவாலங்காடு, திருவாலங்காடு ஒன்றி யம் மணவூர் ரயில் நிலையம் - சின்னம்மா பேட்டை வரையிலான தார்ச்சாலை 4 கி.மீ., துாரம் கொண்டது. இச்சாலை வழியாக தினமும்,10,௦௦௦த்துக்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் திருவள்ளூர், கடம்பத்தூர், அரக்கோணம், ஸ்ரீ பெரும்புதுார் உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக மணவூர் ரயில் டிக்கெட் கவுண்டரில் இருந்து தொழுதாவூர் வரையிலான 3 கி.மீ., சாலை மிகவும் சேதமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து பள்ளம் மேடாக காட்சியளிக்கிறது.
சேதமடைந்த சாலை யால் பல்வேறு விபத்துகளில் பலர் காயம் அடைந்துள்ளனர்.
தற்போது தொழுதாவூர்ஓடைக்கால்வாய் அருகே சாலையில் பள்ளம்ஏற்பட்டுள்ளது. இப்பள்ளம் நாளுக்கு நாள் பெரிதாகி வருவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
சாலையில் விழுந்துள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்என வாகன ஓட்டிகள்வலியுறுத்தியுள்ளனர்.