/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குறுகலான பழையனூர் சாலை அச்சத்தில் வாகன ஓட்டிகள்
/
குறுகலான பழையனூர் சாலை அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : ஆக 02, 2025 11:46 PM

திருவாலங்காடு:பழையனூர் சாலை மிகவும் குறுகலாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் சென்று வருகின்றனர்.
மணவூர் வழியாக, திருவாலங்காடு ---- பேரம்பாக்கம் மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இச்சாலையில், பழையனூர், ராஜபத்மாபுரம், அண்ணாமலைபுரம் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. 14 கி.மீ., நீளமுடைய இச்சாலை, 10 ஆண்டுகளுக்கு முன் 3 மீ., அகலத்தில் அமைக்கப்பட்டது.
அப்போது, பொது போக்குவரத்து மற்றும் வேன், கார், இருசக்கரம் உள்ளிட்ட வாகனங்களின் பயன்பாடு குறைவாக இருந்தது. தற்போது, 24 மணி நேரமும் வாகனங்கள் சென்று வருகின்றன.
குறுகிய சாலையால், அவ்வப்போது எதிரெதிரே வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கி, வாகன ஓட்டிகள் காயமடைந்து வருகின்றனர்.
திருவாலங்காடு தேரடியில் இருந்து பழையனூர் வரையிலான சாலையின் இருபுறமும் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளதால், காலை - மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால், எதிரெதிரே வரும் வாகனங்கள் ஒன்றையொன்று கடக்க முடியாமல், வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர்.
எனவே, இச்சாலையை அகலப்படுத்த மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.