/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குப்பை எரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதி
/
குப்பை எரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : பிப் 13, 2024 08:22 PM

கடம்பத்துார்:திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கடம்பத்துார் ஒன்றியம் தொடுகாடு ஊராட்சிக்குட்பட்ட பராசங்குபுரம்.
இந்த நெடுஞ்சாலை வழியே தினமும் அரசு, தனியார், பள்ளி, கல்லுாரி, தொழிற்சாலை பஸ், கனரக வாகனம் என தினமும் 10,000த்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலையோரம் குப்பையை துாய்மை பணியாளர்கள் அகற்றாமல் தீ வைத்து வருகின்றனர்.
இதனால் ஏற்பட்ட புகையால் இந்த நெடுஞ்சாலை வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெடுஞ்சாலையோரம் குப்பை எரிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

