sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வரி செலுத்தாவிட்டால் 'ஜப்தி' நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

/

வரி செலுத்தாவிட்டால் 'ஜப்தி' நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

வரி செலுத்தாவிட்டால் 'ஜப்தி' நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

வரி செலுத்தாவிட்டால் 'ஜப்தி' நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை


ADDED : பிப் 22, 2024 01:11 AM

Google News

ADDED : பிப் 22, 2024 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சியில் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு கட்டணம், சொத்து வரி, தொழில் வரி ஆகியவற்றை செலுத்த வலியுறுத்தி, கமிஷனர் மற்றும் பணியாளர்கள் வீடு மற்றும் கடைகளுக்கு நேரில் சென்று, நோட்டீஸ் வழங்கி வருகின்றனர்.

இதுவரை 10.61 கோடி ரூபாய் மட்டுமே வரி வசூல் ஆகியுள்ளது. மீதமுள்ள 6.43 கோடி ரூபாயை வசூலிக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

திருவள்ளூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் நகராட்சிக்கு தாங்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் பாதாள சாக்கடை கட்டணம் ஆகியவைகளை உடனடியாக நகராட்சிக்கு நிலுவையின்றி செலுத்த வேண்டும். மேலும் http://tnurbanepay.tn.gov.in என்ற அரசு இணையம் வழியாக செலுத்தவும் வழிவகை செய்யபட்டுள்ளது.

தவறினால், ஜப்தி நடவடிக்கை, குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்படும் என, கமிஷனர் சுபாஷினி எச்சரித்துள்ளார்.






      Dinamalar
      Follow us