/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தரணிவராகபுரத்தில் வரும் 31ல் முருகன் வீதியுலா
/
தரணிவராகபுரத்தில் வரும் 31ல் முருகன் வீதியுலா
ADDED : ஜன 28, 2025 07:57 PM
திருத்தணி:திருத்தணி முருகன் மலைக்கோவிலில் இருந்து, உற்சவர் முருகப்பெருமான், ஆண்டுதோறும், தை மாதத்தில் திருத்தணி ஒன்றியம், தரணிவராகபுரம் கிராமத்தில், வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
அந்த வகையில், நாளை மறுநாள், காலை 10:00 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான், மலைப்படிகள் வழியாக சரவணப்பொய்கை என்கிற திருக்குளத்தை வந்தடைவார்.
பின், அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில், உற்சவ பெருமான், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். அங்கிருந்து, தரணிவராகபுரத்தில் உள்ள பிள்ளையார் கோவில் மண்டபத்திற்கு சுமைதாரர்கள் இழுத்து செல்வர்.
பின், மாலை 6:00 மணிக்கு முருகப்பெருமானுக்கு, அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறும்.
பின், தெருக்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். நள்ளிரவில் உற்சவர் பெருமான் தரணிவராகபுரத்தில் இருந்து புறப்பட்டு, மீண்டும் மலைக்கோவிலை அடைவார்.

