sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சாலை பராமரிப்பில் அலட்சியம் விபத்து அபாயத்தில் வாகனங்கள்

/

சாலை பராமரிப்பில் அலட்சியம் விபத்து அபாயத்தில் வாகனங்கள்

சாலை பராமரிப்பில் அலட்சியம் விபத்து அபாயத்தில் வாகனங்கள்

சாலை பராமரிப்பில் அலட்சியம் விபத்து அபாயத்தில் வாகனங்கள்


ADDED : பிப் 05, 2024 11:19 PM

Google News

ADDED : பிப் 05, 2024 11:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி: கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் ஏற்பட்ட புயல் மழையின்போது, ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரைகள் உடைந்தன.

கரை உடைப்பு வழியாக வெளியேறிய ஆற்றுநீர், பொன்னேரி அடுத்த திருப்பாலைவனம் - மீஞ்சூர் நெடுஞ்சாலையை மூழ்கடித்து பயணித்தது. அப்போது, சாலை ஆங்காங்கே அரித்து செல்லப்பட்டன.இதனால் சாலையோரங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளங்கள் உருவாகின.

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரண்டு மாதங்கள் முடிந்த நிலையில், மேற்கண்ட சாலையை சீரமைப்பதில் நெடுஞ்சாலைத்துறை அலட்சியம் காட்டி வருவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த சாலையில் பயணிக்கும் வாகனங்கள், அரித்து செல்லப்பட்ட இடங்களில் தடுமாறுகின்றனர். மாற்று திசையில் செல்லும்போது எதிரில் வரும் வாகனங்கள் நிலை தடுமாறுகின்றன.

அப்பகுதியில் எந்தவொரு எச்சரிக்கையும் செய்யப்படாமல் இருக்கிறது. மேலும் சாலையோரத்தில் பதிக்கப்பட்ட இரும்பு தடுப்புகள் பெயர்ந்து சேதம் அடைந்து கிடக்கின்றன. சாலை சீரமைப்பில் நெடுஞ்சாலைத்துறையினர் அலட்சியம் காட்டுவதால், வாகனங்கள் பெரும் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளது.

அசம்பாவிதங்களை தவிர்க்க, மழைநீரில் அரித்து செல்லப்பட்ட மேற்கண்ட சாலையை சீரமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us