/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி கோவிலில் 31ல் படித் திருவிழா பக்தர்கள் வசதி குறித்து அதிகாரிகள் ஆய்வு
/
திருத்தணி கோவிலில் 31ல் படித் திருவிழா பக்தர்கள் வசதி குறித்து அதிகாரிகள் ஆய்வு
திருத்தணி கோவிலில் 31ல் படித் திருவிழா பக்தர்கள் வசதி குறித்து அதிகாரிகள் ஆய்வு
திருத்தணி கோவிலில் 31ல் படித் திருவிழா பக்தர்கள் வசதி குறித்து அதிகாரிகள் ஆய்வு
ADDED : டிச 27, 2024 01:48 AM

திருத்தணி:திருத்தணி முருகன் மலைக்கோவிலில், வரும், 31ம் தேதி, படித் திருவிழாவும், ஜன.1ம் தேதி புத்தாண்டு சிறப்பு தரிசனமும் நடைபெறுகிறது.
இந்த விழாவிற்கு, தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் முருகன் கோவிலுக்கு வருவர். இதையடுத்து கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மலைக்கோவில் மற்றும் தேவஸ்தான குடில்களில் செய்து வருகிறது.
மேலும், வாகனங்களில் வரும் பக்தர்களுக்கு வாகன நிறுத்துமிடம் அங்கு அடிப்படை வசதிகள் மற்றும் பக்தர்கள் பாதுகாப்பிற்கு கண்காணிப்பு கேமராக்கள், கூடுதலாக அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நேற்று, திருத்தணி கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் மோகனன், சுரேஷ்பாபு, நாகன் ஆகியோர் மலைக்கோவில், மலைப்பாதை மற்றும் வாகனங்கள் நிறுத்தமிடம் ஆகிய இடங்களில் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
மேலும், மலையடி வாரத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம், அதற்கு செல்வதற்கு வழி போன்ற இடங்களையும் ஆய்வு செய்தனர். அப்போது, கோவில் உதவி பொறியாளர்கள் வேல்முருகன், நேதாஜி உட்பட கோவில் அலுவலர்கள் உடனிருந்தனர்.

