sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பா.ஜ., தேர்தல் அலுவலகம் பூட்டி 'சீல்' வைத்த அதிகாரிகள்

/

பா.ஜ., தேர்தல் அலுவலகம் பூட்டி 'சீல்' வைத்த அதிகாரிகள்

பா.ஜ., தேர்தல் அலுவலகம் பூட்டி 'சீல்' வைத்த அதிகாரிகள்

பா.ஜ., தேர்தல் அலுவலகம் பூட்டி 'சீல்' வைத்த அதிகாரிகள்


ADDED : பிப் 09, 2024 09:43 PM

Google News

ADDED : பிப் 09, 2024 09:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாப்பூர்:மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில், லோக்சபா தேர்தலுக்காக பா.ஜ., சார்பில் திறக்கப்பட்ட தேர்தல் அலுவலகம், பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது.

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள, தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகள் தொகுதி வாரியாக கட்சி அலுவலகங்களை திறந்து வருகின்றன.

அதன்படி பா.ஜ., சார்பில், சென்னை அமைந்தகரையில் தலைமை தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது.

தொடர்ச்சியாக, மத்திய சென்னை மாவட்டம் சார்பில் நேற்று முன்தினம், மயிலாப்பூர் ஆர்.கே.மடம் சாலையில், கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில், தேர்தல் அலுவலகம் திறந்ததாக தெரிகிறது. தென்சென்னை லோக்சபா தேர்தல் பொறுப்பாளர் ராஜா தலைமையில், மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வணிக ரீதியாக பயன்பாட்டிற்கு எனக் கூறி கோவில் இடத்தை வாங்கி, அதில் அரசியல் கட்சி அலுவலகம் திறந்ததாக, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது.

இதைத்தொடர்ந்து நேற்று காலை, ஹிந்து சமய அறநிலையத் துறையின் சென்னை மாவட்ட இணைஆணையர் ரேணுகா தலைமையிலான அதிகாரிகள், இந்த பா.ஜ., தேர்தல் அலுவலகத்தை பூட்டி, 'சீல்' வைத்தனர்.






      Dinamalar
      Follow us