sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருவள்ளூர் நகராட்சியில் அதிரடி கொசு புழு ஒழிக்க 'ஆயில் பால்'

/

திருவள்ளூர் நகராட்சியில் அதிரடி கொசு புழு ஒழிக்க 'ஆயில் பால்'

திருவள்ளூர் நகராட்சியில் அதிரடி கொசு புழு ஒழிக்க 'ஆயில் பால்'

திருவள்ளூர் நகராட்சியில் அதிரடி கொசு புழு ஒழிக்க 'ஆயில் பால்'


ADDED : அக் 26, 2024 07:53 PM

Google News

ADDED : அக் 26, 2024 07:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சியில், கடந்த வாரம் பெய்த பலத்த மழையால், ராஜாஜிபுரம், ஜெயா நகர், புங்கத்துார் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. தேங்கிய தண்ணீரில் கொசு உற்பத்தியாகி, டெங்கு, மலேரியா போன்ற நோய் பரவும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இதையடுத்து, தேங்கிய தண்ணீரில் உற்பத்தியாகும் கொசு புழுக்களை ஒழிக்க நகராட்சி கமிஷனர் திருநாவுக்கரசு உத்தரவின் பேரில், துப்புரவு பணியாளர்கள், நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து, சுகாதார அலுவலர் மோகன் கூறியதாவது:

நகர பகுதியில் தேங்கிய தண்ணீரில், டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசு புழுக்கள் உற்பத்தியாகும். அவற்றை அழிக்க, 'வேஸ்ட் ஆயிலில்', மர சக்கையை ஊற வைத்து, பின் பந்து போல் உருட்டி, ஒரு துணியில் கட்டி, தேங்கிய தண்ணீரில் வீசப்படும்.

இதன் வாயிலாக எண்ணெய் படலம் தண்ணீரில் பரவுவதால், கொசு புழுக்களின் சுவாசம் தடைபட்டு, அவைகள் இறந்து விடும். முதல் கட்டமாக, 100 பந்து தயாரித்துள்ளோம். நேற்று நகரின் பல்வேறு பகுதிகளில், 50 'ஆயில்பால்' தெளிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து, தண்ணீர் தேங்கிய இடங்களில், இந்த எண்ணெய் பந்து வீசி, கொசு புழு அழிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us