ADDED : அக் 18, 2024 09:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் ராஜபத்மாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் திருஞானம், 64. விவசாயியான இவர் கடந்த வாரம் வீட்டில் படுத்திருந்த போது கட்டு விரியன் பாம்பு கடித்தது.
அவரை உறவினர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு தீவிர சிகிச்சையில் இருந்தவர் நேற்று காலை உயிரிழந்தார்.
திருஞானம் மகன் சந்தோஷ் அளித்த புகாரின்படி வழக்கு பதிந்த திருவாலங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.