sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

அச்சுறுத்தும் மெகா இரும்பு பேனரால் பள்ளி நுழைவாயிலில் விபத்து அபாயம்

/

அச்சுறுத்தும் மெகா இரும்பு பேனரால் பள்ளி நுழைவாயிலில் விபத்து அபாயம்

அச்சுறுத்தும் மெகா இரும்பு பேனரால் பள்ளி நுழைவாயிலில் விபத்து அபாயம்

அச்சுறுத்தும் மெகா இரும்பு பேனரால் பள்ளி நுழைவாயிலில் விபத்து அபாயம்


ADDED : ஜன 22, 2025 01:28 AM

Google News

ADDED : ஜன 22, 2025 01:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டில் இருந்து, சோளிங்கர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில், அத்திமாஞ்சேரிபேட்டை அடுத்த அண்ணா நகர் பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன.

இதற்காக, இந்த சாலையில் ஒரத்தில் நடப்பட்டிருந்த பெரிய அளவிலான வழிகாட்டி பதாகை தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளது. அகற்றப்பட்ட வழிகாட்டி பதாகை, 20 அடி நீளத்தில் சாலையில் குறுக்கே உயரத்தில் பொருத்தப்பட்டஇருந்தது. அகற்றப்பட்ட இந்த இரும்பு பதாகை, பல டன் எடை கொண்டது.

சாலையில் இருந்து அகற்றப்பட்ட பதாகை, அருகில் செயல்பட்டுவரும் அரசு தொடக்க பள்ளியின் நுழைவாயிலை ஒட்டி கிடத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளிக்கு வரும் மாணவர்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.

பள்ளி நுழைவாயில் அருகே வைக்கப்பட்டுள்ள இந்த பதாகையை, மாணவர்களின் பாதுகாப்பு கருதி, அதையொட்டிய வயல்வெளியில் பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us