ADDED : பிப் 15, 2024 11:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த தண்ணீர்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், 46.
விவசாய பணி செய்து வரும் இவர் நேற்று காலை 8:30 மணியளவில் வேப்பட்டு ரயில் நிலையத்தில் கடவுப்பாதையை கடக்க முயன்றார். அப்போது சென்னையிலிருந்து பெங்களூர் நோக்கி சென்ற பிருந்தாவன் விரைவு ரயிலில் அடிபட்டு உடல் சிதறி பலியானார்.
தகவலறிந்த திருவள்ளூர் ரயில்வே போலீசார் உடலைக் கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.