sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஊத்துக்கோட்டை - -ஜனப்பன்சத்திரம் வேகத்தடைக்கு வர்ணம் பூசப்படுமா?

/

ஊத்துக்கோட்டை - -ஜனப்பன்சத்திரம் வேகத்தடைக்கு வர்ணம் பூசப்படுமா?

ஊத்துக்கோட்டை - -ஜனப்பன்சத்திரம் வேகத்தடைக்கு வர்ணம் பூசப்படுமா?

ஊத்துக்கோட்டை - -ஜனப்பன்சத்திரம் வேகத்தடைக்கு வர்ணம் பூசப்படுமா?


ADDED : ஜன 27, 2024 11:31 PM

Google News

ADDED : ஜன 27, 2024 11:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை, ஊத்துக்கோட்டை -- ஜனப்பன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் தினமும், 15,000த்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கின்றன.

சில மாதங்களாக இந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளது. சாலை முழுதும் சீரமைக்காமல், 'பேட்ச் ஒர்க்' மட்டும் செய்யப்படுகிறது. சமீபத்தில், 'மிக்ஜாம்' புயலால் பெய்த பலத்த மழையில் இந்த மார்க்கத்தில் சாலை முழுதும் சேதம் அடைந்து காணப்படுகிறது.

மீண்டும், 'பேட்ச் ஒர்க்' மட்டும் செய்யப்பட்டதால், குண்டும், குழியுமான சாலை, மேடு, பள்ளங்களாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். இரவு நேரங்களில் அதிகளவு விபத்துகள் ஏற்படுகின்றன. இதை கட்டுப்படுத்த மேற்கண்ட சாலையில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆனால், அதன் மேல் வெள்ளை வர்ணம் பூசாமல் உள்ளனர். இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடை இருப்பது தெரியாமல் விபத்து ஏற்படுகிறது.

விபத்தை கட்டுப்படுத்த போடப்பட்ட வேகத்தடைகளால் தற்போது விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, ஊத்துக்கோட்டை - ஜனப்பன்சத்திரம் மார்க்கத்தில் உள்ள வேகத்தடைகளுக்கு, வெள்ளை வர்ணம் பூச வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us