/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கண்காணிப்பு குழுக்கள் திருத்தணியில் அமைப்பு
/
கண்காணிப்பு குழுக்கள் திருத்தணியில் அமைப்பு
ADDED : மார் 19, 2024 08:45 PM
திருத்தணி:அரக்கோணம் லோக்சபா தொகுதிக்குட்பட்ட திருத்தணி சட்டசபை தொகுதியில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தீபா தலைமையில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தி, தொகுதி முழுதும் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
மூன்று பிரிவுகளாக கண்காணிப்பு அலுவலர்கள் நியமித்து, மூன்று ஷிப்ட் முறையில் சுழற்சி முறையில் வாகன சோதனை நடத்தியும், அரசியல் கட்சிகளின் கொடிகள், கம்பங்கள் மற்றும் சுவர் விளம்பரம் அழித்து வருகின்றனர்.
இதுதவிர நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளிலும் உள்ளாட்சி பிரதிநிதிகள், வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் போலீசார் துணையுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணித்து வருகின்றனர்.

