ADDED : செப் 13, 2026 08:43 PM
அ நிறம் | அளவு
திருவாலங்காடு, செப். 14–
திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் அடுத்த ராமஞ்சேரி எல்லப்பநாயுடுபேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ், 38. பெயின்டர்.
இவர், நேற்று முன்தினம், ராமஞ்சேரி பெட்ரோல் பங்க் அருகே, சாலையோரம் நடந்து சென்றார். அப்போது, சாலையில் வழுக்கி விழுந்து, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் உயிரிழந்தார். கனம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
