sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சேதமடைந்துள்ள பஸ் நிழற்குடை சீரமைக்க பயணியர் வலியுறுத்தல்

/

சேதமடைந்துள்ள பஸ் நிழற்குடை சீரமைக்க பயணியர் வலியுறுத்தல்

சேதமடைந்துள்ள பஸ் நிழற்குடை சீரமைக்க பயணியர் வலியுறுத்தல்

சேதமடைந்துள்ள பஸ் நிழற்குடை சீரமைக்க பயணியர் வலியுறுத்தல்


ADDED : ஜூலை 16, 2025 01:55 AM

Google News

ADDED : ஜூலை 16, 2025 01:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:சக்கரமநல்லுார் கிராமத்தில், சேதமடைந்துள்ள நிழற்குடையை சீரமைக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கனகம்மாசத்திரம் -- தக்கோலம் மாநில நெடுஞ்சாலையில், திருவாலங்காடு அடுத்து அமைந்துள்ளது சக்கரமநல்லுார் கிராமம்.

இப்பகுதிமக்கள் அரக்கோணம், திருவள்ளூர், கனகம்மாசத்திரம், திருவாலங்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல, நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள இந்த பயணியர் நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த நிழற்குடை, ஆங்காங்கே விரிசல் விட்டு, கூரையின் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து வருவதால், நிழற்குடையை பயன்படுத்த பயணியர் அச்சப்படுகின்றனர்.

மேலும் வெயில், மழைக்கு ஒதுங்க கூட பயன்படாத நிழற்குடையாக இது மாறி வருகிறது.

எனவே, இந்த நிழற்குடையை அகற்றி, புதிதாக அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us