/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சேதமடைந்துள்ள பஸ் நிழற்குடை சீரமைக்க பயணியர் வலியுறுத்தல்
/
சேதமடைந்துள்ள பஸ் நிழற்குடை சீரமைக்க பயணியர் வலியுறுத்தல்
சேதமடைந்துள்ள பஸ் நிழற்குடை சீரமைக்க பயணியர் வலியுறுத்தல்
சேதமடைந்துள்ள பஸ் நிழற்குடை சீரமைக்க பயணியர் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 16, 2025 01:55 AM

திருவாலங்காடு:சக்கரமநல்லுார் கிராமத்தில், சேதமடைந்துள்ள நிழற்குடையை சீரமைக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கனகம்மாசத்திரம் -- தக்கோலம் மாநில நெடுஞ்சாலையில், திருவாலங்காடு அடுத்து அமைந்துள்ளது சக்கரமநல்லுார் கிராமம்.
இப்பகுதிமக்கள் அரக்கோணம், திருவள்ளூர், கனகம்மாசத்திரம், திருவாலங்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல, நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள இந்த பயணியர் நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த நிழற்குடை, ஆங்காங்கே விரிசல் விட்டு, கூரையின் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து வருவதால், நிழற்குடையை பயன்படுத்த பயணியர் அச்சப்படுகின்றனர்.
மேலும் வெயில், மழைக்கு ஒதுங்க கூட பயன்படாத நிழற்குடையாக இது மாறி வருகிறது.
எனவே, இந்த நிழற்குடையை அகற்றி, புதிதாக அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

