/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மக்கள் குறைதீர் கூட்டம் 331 மனுக்கள் ஏற்பு
/
மக்கள் குறைதீர் கூட்டம் 331 மனுக்கள் ஏற்பு
ADDED : பிப் 13, 2024 06:27 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், நிலம் சம்பந்தமாக 76, சமூக பாதுகாப்பு திட்டம் 54, வேலைவாய்ப்பு வேண்டி 63, பசுமைவீடு, அடிப்படை வசதி வேண்டி 67 மனுக்களும் மற்றும் இதர துறை 71 என மொத்தம் 331 மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி வழங்கிட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டர் - வளர்ச்சி சுகபுத்ரா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.