sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மீனவருக்கு பஞ்சப்படி கலெக்டருக்கு மனு

/

மீனவருக்கு பஞ்சப்படி கலெக்டருக்கு மனு

மீனவருக்கு பஞ்சப்படி கலெக்டருக்கு மனு

மீனவருக்கு பஞ்சப்படி கலெக்டருக்கு மனு


ADDED : ஜன 27, 2025 11:29 PM

Google News

ADDED : ஜன 27, 2025 11:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர், ஏவுகணை செலுத்தும் காலத்தில், கடலுக்கு செல்லாத மீனவர் குடும்பத்தினருக்கு, பஞ்சப்படி வழங்க வேண்டும் என, மனு அளிக்கப்பட்டுள்ளது.

பழவேற்காடு, லைட்அவுஸ் குப்பம் மீனவர்கள் சார்பில், கலெக்டரிடம் நேற்று அளிக்கப்பட்ட மனு:

பொன்னேரி வட்டம், பழவேற்காடு அடுத்த, லைட்அவுஸ் குப்பம் ஊராட்சியில், 15 மீன்பிடி கிராமங்களில், 10,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். சமீப காலமாக, ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து ஏவுகணை செலுத்தப்பட்டு வருகிறது.

அந்த சமயத்தில், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என, மீன்வளத்துறை அறிவுறுத்தி வருகிறது. 10,000 குடும்பத்தினரும், மீன்பிடி தொழிலுக்கு செல்லாததால், வறுமையில் சிக்கி தவிக்கின்றனர்.

கடந்த 1980ல் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து ஏவுகணை செலுத்தும்போது, கிராமங்களுக்கு குடும்ப உறுப்பினர் அடிப்படையில் பஞ்சப்படி வழங்கப்பட்டது. தற்போது, இந்த பஞ்சப்படி வழங்கப்படுவதில்லை.

எனவே, ஏவுகணை செலுத்தும் சமயத்தில், மீனவ குடும்பத்தினருக்கு பஞ்சப்படி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us