/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள் மீட்க கோரி கலெக்டருக்கு மனு
/
மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள் மீட்க கோரி கலெக்டருக்கு மனு
மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள் மீட்க கோரி கலெக்டருக்கு மனு
மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள் மீட்க கோரி கலெக்டருக்கு மனு
ADDED : ஏப் 12, 2025 09:34 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே குருவராஜகண்டிகை ஊராட்சிக்கு உட்பட்டது பில்லாக்குப்பம் கிராமம். இந்த கிராமத்தில், சர்வே எண்: 806ல், 24.88 ஏக்கர், 1036ல், 24 ஏக்கர் என, மொத்தம் 48.88 ஏக்கர் பரப்பளவு கொண்ட மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள் இருப்பதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இதை தனியார் சிலர் ஆக்கிரமித்து, தைல மரங்கள் வைத்திருப்பதாகவும், வருவாய் துறையினருக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, கிராமவாசிகள் தெரிவித்தனர். 100 நாள் வேலை செய்யும் பில்லாக்குப்பம் கிராம பெண்கள், மூன்று கி.மீ., தொலைவில் உள்ள அரசு நிலங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, வருவாய் துறையினர் துரித நடவடிக்கை எடுத்து, உடனடியாக ஆக்கிரமிப்பில் உள்ள, 48 ஏக்கர் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை மீட்க வேண்டும். அந்த இடத்தில் 100 நாள் வேலை வழங்க வேண்டும் என, கிராமவாசிகள் சார்பில், கலெக்டருக்கு மனு அனுப்பப்பட்டது.

