sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் 10,000 நாவல் மரக்கன்றுகள் நடல்

/

மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் 10,000 நாவல் மரக்கன்றுகள் நடல்

மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் 10,000 நாவல் மரக்கன்றுகள் நடல்

மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் 10,000 நாவல் மரக்கன்றுகள் நடல்


ADDED : செப் 24, 2025 09:47 PM

Google News

ADDED : செப் 24, 2025 09:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில், 10,000 நாவல் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை கலெக்டர் துவக்கி வைத்தார்.

திருவள்ளுர் மாவட்ட பெருந்திட்ட வளாகம் மற்றும் அரசு மருத்துவ கல்லுாரி வளாகத்தில், நேற்று வனத்துறை சார்பில், பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு, நாவல் மரத்தை கொண்டாடும் வகையில், 10,000 நாவல் மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் பிரதாப் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், மருத்துவ கல்லுாரி மாணவர்கள், வனத்துறை பணியாளர் மற்றும் மக்கள் பங்கேற்றனர்.

இதில், கலெக்டர் பிரதாப் பேசியதாவது:

மாவட்டம் முழுதும், வனப்பகுதி மற்றும் வருவாய் நிலங்களில், 10,000 நாவல் செடிகள் நடப்பட்டு வருகின்றன.

மாவட்டத்தை பசுமையாக்க, 10 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி முதற்கட்டமாக, இன்று பசுமை தமிழ்நாடு இயக்க நாளன்று நாவல் மரங்கள் நடப்பட்டு, மரம் நடும் விழா துவக்கப்பட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், வனத்துறை சார்பில் பள்ளிகளில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியரை பாராட்டி, கேடயங்களை கலெக்டர் வழங்கினார்.






      Dinamalar
      Follow us