/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் பா.ம.க.,வினர் மறியல்
/
திருத்தணியில் பா.ம.க.,வினர் மறியல்
ADDED : நவ 27, 2024 10:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:பா.ம.க., கட்சியின் நிறுவனர் ராம்தாஸ் அறிக்கை குறித்து, முதல்வர் ஸ்டாலின் சர்ச்சையான அறிக்கை வெளியிட்டார்.
இதையடுத்து, திருத்தணி பைபாஸ் சாலையில் நேற்று மாலை, திருத்தணி ஒன்றிய கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய செயலர்கள் சேகர், பழனி ஆகியோர் தலைமையில், 13 பேர் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது முதல்வர் ஸ்டாலின் கூறியதற்கு கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பினர். தொடர்ந்து திருத்தணி போலீசார் மேற்கண்ட, 13 பேர் மீது வழக்கு பதிந்து, தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.