ADDED : நவ 26, 2024 08:15 PM
திருவள்ளூர்:முதல்வர் ஸ்டாலின், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குறித்து தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா.ம.,க சார்பில் மணவாள நகரில் நேற்று காலை 11:30 மணியளவில் சாலை மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலரும், மாவட்ட கவுன்சிலருமான தினேஷ்குமார் தலைமை வகித்தார்.
மாவட்ட அமைப்பு செயலரும், கடம்பத்துார் ஒன்றிய கவுன்சிலருமான வெங்கடேசன் கண்டன உரையாற்றினார்.
இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டுமென கண்டன கோஷம் எழுப்பினர்.
அனுமதியன்றி சாலை மறியலில் செய்ததாக, 40 ஆண்கள், 5 பெண்கள் என 45 பேரை மணவாளநகர் போலீசார் கைது செய்தனர்.
ஆர்.கே.பேட்டையில் நேற்று பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்.கே.பேட்டை போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், 50 பேரை கைது செய்தனர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

