/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொக்லைன் ஓட்டுனர் மயங்கி விழுந்து பலி
/
பொக்லைன் ஓட்டுனர் மயங்கி விழுந்து பலி
ADDED : ஜன 02, 2025 09:07 PM
மப்பேடு:கடம்பத்துார் ஒன்றியம், கொண்டஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் என்கிற செல்வராஜ், 41;  இவருக்கு, மரகதம், 35, என்ற மனைவியும் 17, 15 வயதில் இரு மகள்களும், 13 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
செல்வம், நேற்று முன்தினம், மப்பேடு அடுத்த, சமத்துவபுரம் சிப்காட் பகுதியில் பொக்லைன் ஓட்டுனராக பணிபுரிந்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென பொக்லைன் ஓட்டுனர் இருக்கையிலேயே மயங்கி விழுந்தார்.
இதையடுத்து, அருகிலிருந்தோர் அவரை மீட்டு, '108' அவசரகால ஆம்புலன்ஸ் சேவை வாயிலாக திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே இறந்து விட்டார் என தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது மனைவி மரகதம் அளித்த புகாரின்படி, மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

