/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிறுமிக்கு தொல்லை வாலிபருக்கு 'போக்சோ'
/
சிறுமிக்கு தொல்லை வாலிபருக்கு 'போக்சோ'
ADDED : மார் 14, 2024 10:23 PM

பட்டாபிராம்:திருநின்றவூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி, அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவருக்கு, 'ஆன்லைன்' வாயிலாக, அரியலுார் மாவட்டம் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த அருண்குமார், 24, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, அருண்குமார் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு உள்ளார்.
கடந்த ஓராண்டாக சிறுமியிடம், 1 சவரன் நகை, சிறுகச் சிறுக 50,000 ரூபாய் வரை பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், நடந்தவற்றை வெளியில் கூறினால், சிறுமியின் தாய், தம்பியை கொலை செய்து விடுவதாக அருண்குமார் மிரட்டியுள்ளார்.
இதுகுறித்த புகாரை விசாரித்த பட்டாபிராம் அனைத்து மகளிர் போலீசார், தலைமறைவாக இருந்த அருண்குமாரை,'போக்சோ' வழக்கில் கைது செய்து, மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.

