ADDED : மார் 17, 2024 11:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழல்: போக்சோ வழக்கில் கைதான, ஈரோடைச் சேர்ந்த அய்யாவு, 79, என்பவர், கடந்த மாதம் முதல் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதற்கு முன், கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அங்கு, சுவாசக்கோளாறால் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக புழல் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று காலை, உயிரிழந்தார்.

