/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நீலாங்கரையில் மகன் தாக்கியதில் போலீஸ் அதிகாரி கவலைக்கிடம்
/
நீலாங்கரையில் மகன் தாக்கியதில் போலீஸ் அதிகாரி கவலைக்கிடம்
நீலாங்கரையில் மகன் தாக்கியதில் போலீஸ் அதிகாரி கவலைக்கிடம்
நீலாங்கரையில் மகன் தாக்கியதில் போலீஸ் அதிகாரி கவலைக்கிடம்
ADDED : ஜன 27, 2025 11:32 PM
சென்னைஇ.சி.ஆர்., பாலவாக்கத்தைச் சேர்ந்தவர் விஜயபாஸ்கர், 48; சென்னை விமான நிலையத்தில் எஸ்.பி.சி.ஐ.டி., -  எஸ்.ஐ., ஆக பணிபுரிகிறார்.
இவர், குடும்பத்தை சரியாக கவனிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, 25ம் தேதி இரவு, வீட்டில், மனைவி, பிள்ளைகளுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த மகன் சுகாஸ், 21, விஜயபாஸ்கர் முகத்தை, கையால் சரமாரியாக தாக்கினார். அவரை சுவரில் இடித்தும் பலமாக தாக்குதல் நடத்தினார்.
இதில், விஜயபாஸ்கரின் தாடை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.
சுயநினைவின்றி, காதிலிருந்து ரத்தம் வருவதால், அவரது உடல்நிலை மிகவும் பலவீனமடைந்து வருவதாக, மருத்துவர்கள் கூறி உள்ளனர்.
நீலாங்கரை போலீசார், கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, மகன் சுகாசை கைது செய்தனர்.
சுகாஷ், சோழிங்கநல்லுாரில் உள்ள ஒரு தனியார் கல்லுாரியில் பொறியியல் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

