/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரி சார் - பதிவாளர் ஆபீசில் ரூ.79,100 சிக்கியது
/
பொன்னேரி சார் - பதிவாளர் ஆபீசில் ரூ.79,100 சிக்கியது
பொன்னேரி சார் - பதிவாளர் ஆபீசில் ரூ.79,100 சிக்கியது
பொன்னேரி சார் - பதிவாளர் ஆபீசில் ரூ.79,100 சிக்கியது
ADDED : டிச 13, 2024 09:34 PM
பொன்னேரி:பொன்னேரி சார் - -பதிவாளர் அலுவலகத்தில், பத்திரப்பதிவு, சான்றுகள் வழங்குதல் உள்ளிட்ட பணிகளுக்கு, அதிக அளவில் லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன.
அதன் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி தலைமையிலான குழுவினர் நேற்று, பொன்னேரி சார்- - பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின் முடிவில், கணக்கில் வராத பணம், 79,100 ரூபாய் சிக்கியது. பணியில் இருந்த சார் - -பதிவாளர் குமரேசனிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, லஞ்ச ஒழிப்பு போலீசார் பரிந்துரை செய்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.