sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பழுதடைந்த சுகாதார நிலையத்தை புதுப்பிக்க கர்ப்பிணியர் வேண்டுகோள்

/

பழுதடைந்த சுகாதார நிலையத்தை புதுப்பிக்க கர்ப்பிணியர் வேண்டுகோள்

பழுதடைந்த சுகாதார நிலையத்தை புதுப்பிக்க கர்ப்பிணியர் வேண்டுகோள்

பழுதடைந்த சுகாதார நிலையத்தை புதுப்பிக்க கர்ப்பிணியர் வேண்டுகோள்


ADDED : ஜன 26, 2025 02:43 AM

Google News

ADDED : ஜன 26, 2025 02:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், சின்னம்மாபேட்டை ஊராட்சியில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.

இந்த துணை சுகாதார நிலையம் வாயிலாக அரிசந்திராபுரம், தொழுதாவூர், சின்னம்மாபேட்டையைச் சேர்ந்த 25,000க்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர்.

நான்கு ஆண்டுகளுக்கு முன், துணை சுகாதார நிலைய கட்டடம் பழுதடைந்தது. இதையடுத்து, ஊராட்சி சார்பில், தனியார் இடத்தில், தற்காலிகமாக 4,000 ரூபாய்க்கு வாடகைக்கு துணை சுகாதார நிலையம் செயல்பட வழி வகுக்கப்பட்டது.

இந்நிலையில், அங்கு மருத்துவமனைக்கு உண்டான போதிய வசதி இல்லாததாலும், பெண்கள் குழந்தைகள் காத்திருக்க முடியாத சூழலும் உள்ளது.

அதேபோன்று கர்ப்பிணிகள் பரிசோதனை செய்து கொள்ள இடவசதி இன்றி சிரமமாக உள்ளது. எனவே, கர்ப்பிணியர், 5 கி.மீ துாரமுள்ள திருவாலங்காடு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் சிலர் தனியார் மருத்துவமனைக்கு செல்வதாக கூறுகின்றனர்.

எனவே, சின்னம்மாபேட்டையில் பழுதடைந்து பாழடைந்த நிலையில் உள்ள துணை சுகாதார நிலைய கட்டடத்தை அகற்றி, புதிதாக அமைக்க சுகாதார துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கர்ப்பிணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'திருவாலங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் சேதமடைந்த துணை சுகாதார நிலைய கட்டடங்கள் சீரமைக்க பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. இக்கட்டடமும் பரிந்துரையில் உள்ளது. விரைவில் இந்த பழுதடைந்த கட்டடம் இடிக்கப்பட்டு புதிய கட்டடம் கட்டப்படும்' என்றார்.






      Dinamalar
      Follow us