sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஆரம்ப சுகாதார நிலைய கட்டட பணி 'விறுவிறு'

/

ஆரம்ப சுகாதார நிலைய கட்டட பணி 'விறுவிறு'

ஆரம்ப சுகாதார நிலைய கட்டட பணி 'விறுவிறு'

ஆரம்ப சுகாதார நிலைய கட்டட பணி 'விறுவிறு'


ADDED : நவ 03, 2025 10:24 PM

Google News

ADDED : நவ 03, 2025 10:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி: ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, 1.70 கோடி ரூபாயில் புதிய கட்டடம் கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது.

திருத்தணி நகர ஆரம்ப சுகாதார நிலையம், தற்போது ரயில் நிலையம் எதிரே இயங்கி வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, தினமும் 100க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் மற்றும் கர்ப்பிணியர் வந்து செல்கின்றனர்.

தற்போது, ஆரம்ப சுகாதார நிலையம் குறுகிய இடத்தில் இயங்கி வருவதால், புறநோயாளிகள் மற்றும் கர்ப்பிணியர் சிகிச்சை பெறுவதற்கு கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதையடுத்து, திருத்தணி நகராட்சி நிர்வாகம், திருத்தணி - சித்துார் சாலையில், ராஜிவ்காந்தி நகரில், 12,000 சதுரடியில், 1.70 கோடி ரூபாய் மதிப்பில், கடந்த மாதம் ஆரம்ப சுகாதார நிலைய கட்டட பணியை துவக்கியது. தற்போது, கட்டட பணி வேகமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து, திருத்தணி நகராட்சி அதிகாரி கூறியதாவது:

தற்போது இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில், போதிய இடவசதி இல்லாமல் நோயாளிகள் சிரமப்பட்டனர். இதையடுத்து, ராஜிவ்காந்தி நகரில் புதிய கட்டட பணியை துவங்கியுள்ளோம்.

மூன்று மாதத்திற்குள் கட்டட பணியை முடித்து, ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்படவுள்ளது. உள்நோயாளிகளும் தங்கி சிகிச்சை பெறும் வகையில் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us